'எந்த அறிகுறியும் இல்ல'...'மருத்துவ பரிசோதனைக்கு போன இடத்தில் கழிவறைக்கு போன இளம்பெண்'... காதலனுக்கு பறந்த போன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற இடத்தில் இளம்பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்துள்ள சம்பவம், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் Dion seaborne. இவர் வேல்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையான Royal Gwentக்கு மருத்துவப்பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவர் வருவதற்காகக் காத்திருந்த அவர், இயற்கை உபாதையைக் கழிக்க மருத்துவமனை கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலி வந்து குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை, அவருக்கே தான் கர்ப்பம் என்பது தெரியாது.

விசித்திரமான இந்த நிகழ்வு குறித்து விவரித்த Dion, ''நான் கர்ப்பமாக இருப்பதாக உணரவில்லை. அதுதொடர்பான எந்த அறிகுறியும் எனக்குத் தோன்றவில்லை. அதிலும் குறிப்பாக நான் எடை போடவே இல்லை. என்னைப் பார்த்த பலரும் என்ன எடையைக் குறைத்து விட்டாயா என கேட்கும் அளவிற்கு எனது எடை குறைந்து விட்டது'' என Dion தெரிவித்துள்ளார்.

இதனிடையே கழிவறையிலிருந்து அவசர உதவிக்கான எண்ணை அவரால் அழுத்த முடியவில்லை. இதனால் Dion சத்தம் போட்டு செவிலியரை அழைத்துள்ளார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அவரது காதலன் callum morrisக்கு தெரியப்படுத்தப்பட்டது. போனில் நடந்த சம்பவங்களைக் கூறியதும் அவர் முதலில் நம்பவில்லை. பின்னர் அனைத்தும் உண்மை எனத் தெரிய வந்ததும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பின்னர் மருத்துவமனைக்கு வந்த அவர் தாயையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக அங்கிருந்த செவிலியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்