வாடகை டூ சொந்த வீடு.. "104 வருஷமா இங்க தான் இருக்கேன்!".. நெகிழவைக்கும் மூதாட்டி.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒவ்வொரு காலகட்டம் வரும்போது வீடு, வாசல் என அனைத்தையும் மாற்றி பார்க்கும் ஒரு மனபாவம் மனிதனுக்கு உண்டு.

Advertising
>
Advertising

Also Read | காசு கொடுத்து செல்லாத 500, 1000 ரூ நோட்டுகளை லட்ச கணக்கில் வாங்கிக் குவித்த 2 பேர்..போலீசுக்கு கிடைச்ச ரகசிய தகவல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

குறிப்பாக காலம் மாறும்போதும் சரி, பண வசதி பெருகும் போதும் சரி வீட்டை புதிதாக கட்டுவதும், புதிய புதிய இடங்களுக்கு புலம்பெயர்வதும் சரி மனிதர்க்குள் சகஜமாக நடைபெறும். ஆனால் 104 வருடமாக பெண்மணி ஒருவர் ஒரே வீட்டில் வசித்து வரக்கூடிய தகவல் பிரிட்டனில் பரவி வருகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த எல்சி ஆல்காக்  என்கிற பெண்மணி சுமார் 104 வருடமாக தான் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே குடியிருந்து வருகிறார். 1918 இல் இவர் பிறந்திருக்கிறார். அப்படியானால் இந்த பெண்மணி இதுவரை சுமார் 2 உலகப்போரை சந்தித்திருக்க வேண்டும், பிரிட்டன் மன்னர்கள் வரிசையில் நான்கு மன்னர்கள் இவருடைய காலகட்டத்தில் மாறிவிட்டனர், இதே போல் 25 பிரதமர்கள் இவருடைய காலகட்டத்தில் மாறி இருக்க வேண்டும், இந்த அனுமான கணக்குகளை ஒரு பக்கம் தள்ளி வைத்தால், இன்னொரு புறம் இந்த பெண்மணியின் வயது உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளலாம்.

பிரிட்டன் நகரின் பார்கர் எனும் தெருவில் உள்ள மாடி வீடு ஒன்றில்தான் இந்த பெண்மணி வசித்து வருகிறார். 1902-ஆம் ஆண்டு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். அதன் பின்னர் இவருக்கு 1941-ல் திருமணம் நடந்திருக்கிறது. அந்த சமயத்தில் இரண்டாம் உலகப் போர் தீவிரமாக இருந்தது. பின்னர் தன்னுடைய கணவருடன் இதே வீட்டில் வசிக்க தொடங்கி இருக்கிறார் இந்த பெண்.

பின்னர் இவருடைய தாயார் இறந்து போக, தமது தந்தையை கவனிக்கும் பொறுப்பும் இவருக்கு அமைந்தது. தொடர்ந்து தந்தை மற்றும் கணவரை கவனித்துக் கொண்டு இதே வீட்டில் இருந்த இவர், 1949 இல் தந்தையைப் பறிகொடுத்தார். தந்தையின் மரணத்தை தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இந்த வீட்டை சொந்தமாக வாங்கி இருக்கிறார் இப்பெண்மணி.

இதற்கென வங்கியில் இருந்து கடன் பெற்று, சுமார் 25 பவுண்டுக்கு இந்த வீட்டை வாங்கி இருக்கிறார் இவர். இப்போது இந்த வீடு மற்றும் நிலத்தின் மதிப்பு 75 ஆயிரம் பவுண்டுகள் என்று கூறப்படும் நிலையில், இந்த வீட்டை விட்டு எங்கும் செல்லாத இவர், இந்த வீட்டிலேயே வசிக்கக்கூடிய காட்சிகளை காண முடிகிறது. இந்த வீட்டை விட்டு வேறு எங்கும் புலம் பெயரக் கூடிய தேவையும் அவசியமும் தனக்கு இதுவரை ஏற்படவில்லை என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

தம் வாழ்வோடு இரண்டற கலந்து இந்த வீட்டை விட்டு தான் பிரியவேயில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். 75 வயது உடைய இவருடைய மகன் உட்பட பலரும் இதையே தற்போது கூறி வருகின்றனர். 104 வயது ஆகிய இவர் தம்முடைய இறுதி மூச்சு வரை இந்த வீட்டில் குடியிருக்கவே ஆசைப்படுவதாகவும் கூறி நெகிழ வைக்கிறார்.

Also Read | பாகுபலி சமோசா-வா? என்ன இப்டி இருக்கு??.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. சுவாரஸ்ய பின்னணி!!

OLD WOMEN, HOME, HOUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்