"எல்லாரும் நல்லா பாத்துக்குங்க!.. நான் விண்வெளிக்கு போறேன்!".. சூரியனுக்கு புறப்படும் சிம்பன்ஸி!.. நாசாவின் மாஸ்டர் ப்ளான் 'இது' தான்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சூரியன் பற்றிய ஆய்வில், முக்கிய மைல் கல்லாக விண்கலம் மூலம் சிம்பன்சியைச் சூரியனை நோக்கி நேரடியாக அனுப்பி வைக்கும் புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது நாசா.

நாசா  விஞ்ஞானி சார்லஸ் போல்டன், "சிம்பன்சி குரங்குகள் உயிரியல் ரீதியில் மனிதனுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவை. அதனால், சிம்பன்சியைச் சூரியனுக்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்யவிருக்கிறோம். சூரியனைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் பிளாஸ்மாவுக்குள் நுழையும்போது சிம்பன்சியின் எதிர்வினையிலிருந்து நம்மால் நிறையக் தெரிந்து கொள்ளமுடியும். சூரியனுக்குச் செலுத்தும் விண்கலத்தில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு சூரியனின் மேற்பரப்பில் உள்ள 27 மில்லியன் டிகிரி வெப்ப நிலைக்கு ஏற்ப சிம்பன்சியின் உடலியல் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கவிருக்கிறோம்.

இந்தத் திட்டம் மூலம் எதிர்காலத்தில் மனிதர்களைச் சூரியனை நோக்கி அனுப்பி வைக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். மனிதன் மட்டும் வெற்றிகரமாகச் சூரியனுக்கு அனுப்பிவைக்கப்பட்டால், அங்கே நிரந்தரமான குடியேற்றத்தை அமைக்கும் சூழல் ஒரு நாள் உருவாகலாம். அதற்கு இந்தத் திட்டம் படிக்கல்லாக அமையும்" என்று தெரிவித்தார்.

சூரியனை நோக்கி மனிதனை அனுப்பும் முன்னோடித் திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. அதனால், சிம்பன்சி குரங்கை அனுப்பி வைக்கும் திட்டம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம், நாம் அறியாத பல ரகசியங்களைச் சூரியனைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். முதன்முதலில் நாசா சூரியனை நோக்கி 'பார்க்கர் சோலார் புரோப்' எனும் செயற்கைக்கோளை 2018-ல் ஏவியது.

தற்போது இந்த விண்கலம் சூரியனை மிக நெருக்கமாக அதன் ஐந்தாவது ஆர்பிட்டில் 244,225 மைல்கள் வேகத்தில், சூரியனின் மேற்பரப்பிலிருந்து 11.6 மில்லியன் மைல் தொலைவை நெருங்கியிருக்கிறது. சூரியன் பற்றிய பல்வேறு தகவல்களைப் பூமிக்கு அனுப்பியும்  வருகிறது. இந்தியாவும் சூரியனுக்கு ஆதித்யா - எல் 1 என்ற விண்கலத்தை இந்த ஆண்டு இறுதியில் சூரியனை நோக்கி ஏவத் திட்டமிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்