பக்கத்து வீட்டுப் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த கணவன்.. அதற்கு மனைவி கொடுத்த தரமான பதிலடி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 2021ம் ஆண்டில்  இளைஞர்கள் அதிகம் தேடியது எவ்வகை ஆபாச வீடியோக்கள் என்ற பட்டியலை பிரபல ஆபாச இணையதளமான பார்ன் ஹப் (pornhub) வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா காலத்தில் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. பெரியோர் மட்டுமல்லது பள்ளி மாணாக்கர் இடையேயும் ஆபாச படம் பார்க்கும் பழக்கம் ஊடுருவியுள்ளது. 

Advertising
>
Advertising

அந்தவகையில் சென்னையில் ஒருவர் பெண்கள் குளிப்பதை அவர்களுக்கு தெரியாமல்  வீடியோ எடுத்து ரசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த சேகர் என்பவர் தனது காதல் மனைவியுடன் வசித்து வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் சேகருக்கு பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும், அவர்களின் அங்க அசைவுகளையும் படம் பிடித்து பார்க்கும் ஆசை ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக தனது செல்போன் மூலம் பெண்களின் ஆபாச வீடியோக்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் பதிவு செய்து வந்துள்ளார். இதனிடையே சேகரின் மனைவியிடம் இதுகுறித்து ஒரு பெண் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கணவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினார் சேகரின் மனைவி.

இரவு சேகர் தூங்கிய பிறகு அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது, அதில்ஆபாச வீடியோக்கள் பல இருந்தன. இதனை கண்டு  அதிர்ச்சியடைந்த பெண், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதுதொடர்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி விசாரணை நடத்தினார். விசாரணையில்,  பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பது மட்டுமின்றி அவர்கள் வாசலில் கோலம் போடுவது உள்ளிட்ட ஆபாச வீடியோக்களையும் சேகர் தனது செல்போனில் பதிவு செய்தது தெரியவந்தது.

இந்த ஆபாச வீடியோக்களை தனது வீட்டில் வைத்து யாருக்கும் தெரியாமல் சேகர் பார்த்து ரசித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், போலீசார் அவரை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனது கணவர் சேகர் செய்த குற்றத்தை  துணிச்சலாக போலீசில் புகார் தெரிவித்த சேகரின் மனைவியை காவலர்கள் பாராட்டினர்.

CHENNAI, THIRUVOTRIYUR, YOUNG GUY ARRESTED, CHENNAI POLICE, ILLEGAL VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்