VIDEO: ‘செலவுக்கு பணம் இல்லை’!.. ‘சென்னையில் எதிர்வீட்டு இளைஞர் செய்த செயல்’!.. அதிரவைத்த சிசிடிவி காட்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரும்பாக்கம் அருகே இளைஞர் ஒருவர் வீடு புகுந்து கொள்ளை அடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவரது வீட்டில் உள்ள பீரோவில் இருந்து 6 சவரன் தங்க நகை கொள்ளை போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது கவிதாவின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் புகுந்து கொள்ளை அடுத்து செல்வது பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் நகையை கொள்ளை அடித்தது, கவிதாவின் எதிர்வீட்டு இளைஞர் மகேந்திரன் என்பவது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த நகையை பறிமுதல் செய்துள்ளனர். வெளியூரிலிருந்து வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளதால், வாடகை மற்றும் தனது செலவுக்கு பணம் இல்லாததால் நகையை திருடியதாக மகேந்திரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ROBBERY, CCTV, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்