"பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த அழுகை சத்தம்!".. '23 வயது இளம்' பெண்ணின் இரண்டாவது கணவரின் 'உறைய வைத்த' செயல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும், திருச்சியை சேர்ந்த நபருக்கும் திருமணம் முடிந்து மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

Advertising
Advertising

அப்பெண்ணோ கம்பத்தில் உள்ள தன் தந்தையின் வீட்டில் வசித்து வரும் நிலையில், அவரது தோழியான தேவி என்பவரது தம்பியும் கம்பம்  அருகே உள்ள ஊரக பகுதியில் வசிக்கும் செல்லத்துரை என்பவரின் மகனுமான சிங்கராஜாவின் அறிமுகம் அப்பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பெண்ணுடன் சிங்கராஜா ஒரு வருடமாக பழகி வந்ததோடு, அப்பெண்ணை சிங்கராஜா மறுமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தார்.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு காமயகவுண்டன்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்த நிலையில் நேற்றைய தினம் அப்பெண்ணின் அழுகுரல் அவரது பூட்டிய வீட்டிலிருந்து வந்ததை கேட்டு, அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் பூட்டிய வீட்டில் கடுமையான காயங்களுடன் அப்பெண்ணும் அவருடைய மூன்றரை வயது குழந்தையும் இருந்ததைக் கண்டு பதறிப்போய் அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை செய்து சிங்க ராஜாவை கைது செய்தனர்.

சிங்கராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணை காதலித்து அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். நேற்றையதினம் தாம்பத்திய உறவுக்கு அப்பெண்ணை சிங்கராஜா அழைத்ததாகவும் அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த சிங்கராஜா அப்பெண்ணை கடுமையாக தாக்கியதோடு, அப்பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். 

இதன் காரணமாக இருவருக்கும் சண்டையும் வாக்குவாதமும் முற்றியதாக தெரிகிறது.  அதன் பின்னர் தனது இரண்டாவது மனைவி மற்றும் மனைவியின் குழந்தை உள்ளிட்ட இருவரையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு அங்கிருந்து சிங்கராஜா வெளியே சென்றுள்ளார். அப்பெண்ணின் அழுகுரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிங்கராஜா மீது போக்சோ சட்ட பிரிவு உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை வேண்டும் என கம்பம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்