'பாசிப்பயறு' பறிக்கச்சென்ற பெண்... 'சோளக்காட்டில்' சடலமாக கிடந்த அவலம்... 'பாலியல்' வன்கொடுமையா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பரளச்சி சேதுபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சத்யபாமா. இவர்கள் இருவரும் விவசாய பணிகள் செய்து வருகின்றனர். அந்தவகையில் நேற்றிரவு சத்தியபாமா தங்களுடைய வயலுக்கு பாசிப்பயறு பறிக்க சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் கனகராஜ் மற்றும் ஊர்மக்கள் சேர்ந்து சத்யபாமாவை தேடியுள்ளனர். தொடர்ந்து காவல்துறையிலும் தகவல் அளிக்க, போலீசார் மோப்ப நாயுடன் இரவு முழுவதும் சத்யபாமாவை தேடியுள்ளனர். அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் இன்று காலை சோளக்காட்டில் சத்யபாமா கழுத்தறுபட்டு சடலமாக கிடந்துள்ளார்.

இதனால் அவர் பாலியல் பலாத்காரம் எதுவும் செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்