தங்கச்சியிடம் செல்போன் கேட்ட அக்கா.. தூக்கக் கலக்கத்தில் தர மறுத்ததால் நடந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகனிடம் பேசுவதற்கு செல்போன் கொடுக்காத ஆத்திரத்தில் தங்கையை அக்கா கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகக்கோனானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 45). இவரின் கணவர் இறந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், தனது தாயார் பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது உடன் பிறந்த அக்கா வெங்கடேஷ்வரி (வயது 47) என்பவர் திருமணமாகி கணவர் சுப்பிரமணியுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு நாகமணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

அக்கா

இந்த நிலையில் நேற்று இரவு ஒரே வீட்டில் அக்கா, தங்கை இருவரும் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு திடீரென எழுந்து தனது மகனிடம் பேசவேண்டும் செல்போன் கொடு என்று தமிழ்ச்செல்வியிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் ஏன் இப்படி தொல்லை செய்கிறாய் பேசாமல் போய் தூங்கு என தங்கை தமிழ்செல்வி கூறியுள்ளார்.

செல்போன்

இதில் ஆத்திரமடைந்த அக்கா வெங்கடேஸ்வரி, வீட்டில் இருந்த அருவாள்மனை எடுத்து தங்கையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவரா?

இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார், தமிழ் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்துர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அக்கா வெங்கடேஸ்வரி மனநிலை சரியில்லாதவர் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதனால் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CELLPHONE, SISTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்