உங்கள 'கல்யாணம்' பண்ண நான் ரெடி...! திடீர்னு மனைவியோட ஃபோட்டோல மாட்டியிருந்த 'அது' காணாம போயிருக்கு...! - முதியவரை நம்ப வைத்து ஏமாற்றிய பெண்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. சுமார் 70 வயது வயதான கோவிந்தசாமியின் மனைவி வசந்தா சென்ற வருடம் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார். முதியவர் கோவிந்தசாமிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தாலும், அவரை வீட்டிலிருந்து கவனித்து கொள்ள ஆள் இல்லை.

இதன்காரணமாக, வயதான காலத்தில் உதவி செய்வதற்காக தன்னைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு பெண்துணை வேண்டி திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

அப்போது சீர்காழியைச் சேர்ந்த 49 வயது விஜயசாந்தி என்பவரின் செல்ஃபோன் எண்ணைக் கொடுத்து இவர் உங்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார், இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்பது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

அதன்பின் பல நாட்கள் பேசி, விசாரித்து கோவிந்தசாமியைத் திருமணம் செய்து கொள்வதாக விஜயசாந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 23-4-2021 அன்று சின்னசேலத்தில் உள்ள கோவிந்தசாமி வீட்டிற்கு விஜயசாந்தி நேரடியாக வந்துள்ளார். அப்போது அவருடன் இரண்டு நாள் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் விஜயசாந்தி தான் ஊருக்குச் சென்று அந்த விவாகரத்து நோட்டீஸை எடுத்துக் கொண்டு மீண்டும் வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் அவர் அதற்கு பிறகு திரும்பி வரவில்லை.

அதன்பின் விஜயசாந்தியே கடந்த 07-05-2021 மீண்டும் கோவிந்தசாமியைத் தேடி சின்னசேலம் வந்துள்ளார். அப்போது, கோவிந்தசாமி தனது வீட்டில் மாட்டப்பட்டிருந்த அவரது மனைவி வசந்தாவின் புகைப்படத்தில் அவரின் நினைவாக ஒன்பதரை பவுன் தாலிச் சரடு மாட்டியிருந்துள்ளார்.

அந்த நகைகளை விஜயசாந்தி யாருக்கும் தெரியாமல் திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். சிறிது நேரம் கழித்து இதை அறிந்த கோவிந்தசாமி விஜயசாந்தியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போதும் செல்போனை எடுக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று (12-07-2021) காலை சின்னசேலம் பேருந்து நிலையத்தில் விஜயசாந்தி சுற்றிக் கொண்டிருந்ததைத் தற்செயலாகப் பார்த்த கோவிந்தசாமியும் அவருடன் இருந்த அவரது மகளும் ஓடிச் சென்று விஜயசாந்தியை பிடித்து சின்னசேலம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன்பின் சின்னசேலம் காவல் துறையினர் விஜயசாந்தி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்