நல்ல 'பலன்' குடுக்குது... சென்னைல இருக்க எல்லா 'கொரோனா' ஹாஸ்பிடலயும்... 'இந்த' மருந்தை குடுக்க போறோம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கபசுர குடிநீர் உள்ளிட்ட சில சித்த மருந்துகள் கொரோனா தடுப்பிற்காக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு விதமான வழிமுறைகளை பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும் இனி சித்த மருந்துகளை வழங்க இருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சித்த மருந்துகள் நல்ல பலனளிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 'சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் கல்லூரி மற்றும் வியாசர்பாடியில் உள்ள அம்தேகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்