“தாங்குற வலிமை இல்ல... மிஸ் யு மை டியர் பவ்!” .. கலங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டையில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் பதவிகளில் வென்ற அதிமுகவினருக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து கூறினார்.

அதன் பின்னர் அவரை அவரது  தனி உதவியாளர் வெங்கடேசன் என்பவர் திருச்சி விமான நிலையத்தில் விட்டுவிட்டு, தனது சொந்த ஊரான புதுக்கோட்டை பரம்பூருக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அவருடன் செல்வம் என்பவர் , அவருடைய பொலிரோ வாகனத்தை ஓட்டிச்சென்றார். அப்போது கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே உள்ள ஒரு புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில், வெங்கடேசன், செல்வம் இருவருமே உயிரிழந்தனர்.

இதுபற்றி பேசிய விஜயபாஸ்கர், `நீ இவ்வுலகில் இல்லை என்பதை நினைத்தால் இதயம் நொறுங்குகிறது. என் மனதில் உன் நினைவுகள் பளிச்சிடுகின்றன. என்னை வலிமையாக இருக்கச் சொன்ன உனது இழப்பை ஏற்கும்போது அது அதிக வலியைக் கொடுக்கிறது. இத்தனை சிறிய வயதில் மரணித்துவிட்ட உனது மரணத்தால் நான் உடைந்திருக்கும் இந்த சூழலில்

எனக்கு ஆறுதல் கூற நீ இல்லாமல் போய்விட்டாய். உன்னையும், உன் புன்னகையையும், உன் அன்பையும் இனி எப்போதும் மிஸ் செய்வேன். உனது ஆத்மா சாந்தியடையட்டும் மை டியர் பவ்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Also Read

அமைச்சர் விஜயபாஸ்கரை... ஏர்போர்ட்டில் வழியனுப்பி விட்டு... திரும்பிய தனி உதவியாளருக்கு... நேர்ந்த பரிதாபம்!

VIJAYABASKAR, TWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்