'ஒரு முறை அல்ல.. ஓராயிரம் முறை இதை சொல்றதுல பெருமை கொள்கிறேன்!' - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் மற்றும் சட்ட திருத்த மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் மசோதாக்களை விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதோடு ஸ்டாலின் இதை அரசியலாக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.

அத்துடன், ஒரு முறை அல்ல.. ஓராயிரம் முறை தாமும் ஒரு விவசாயிதான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறிய தமிழக முதலமைச்சர் தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு முன்னெடுக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்