'கணவரைக் கொன்று கிச்சனுக்குக் கீழே புதைத்த மனைவி'.. ஒரு மாதம் கழித்து நடந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கணவரைக்  கொன்று கிச்சனில் புதைத்து மூடிவிட்டு, அதன் மீது நின்று ஒரு மாதமாக சமையல் வேலைகளைப் பார்த்துவந்த மனைவியின் செயல் தெரியவந்து, அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசம், அனுப்பூர் மாவட்ட பகுதியில், கடந்த மாதம் வழக்கறிஞர் மகேஷ் பனவால் என்பவர் கரோண்டி கிராமத்தில் இருந்து காணாமல் போனதாக, அவரது மனைவி பிரமிளா (35) கொடுத்த புகாரை அடுத்து மகேஷின் அண்ணன்  அர்ஜூன் பனவால் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

அதன்படி, அர்ஜூன் தனது குடும்பத்தாருடன் எப்போதெல்லாம் தனது சகோதரர் மகேஷைப் பார்க்கச் சென்றாரோ அப்போதெல்லாம், பிரமிளா அவர்களை வீட்டுக்குள்ளே வர விடாமல் திசைமாற்றி பேசி அனுப்பிவிடுவாராம். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் பிரமிளாவின் வீட்டை சோதித்தில், அங்கு பிணவாடை வீசியுள்ளது.

அப்போதுதான் கிச்சனில் புதைக்கப்பட்ட மகேஷின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் பின் பிரமிளா, தன் கங்காராம் என்பவருடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்று கிச்சனில் புதைத்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால் கங்காராம், இந்த கொலைக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என கூறியுள்ளார்.

கங்காராமின் மனைவியுடன் பிரமிளாவின் கணவர் மகேஷ் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால், ஆத்திரமடைந்த பிரமிளா கங்காராமின் உதவியுடன், தன் கணவரைக் கொன்று தன் வீட்டு கிச்சனில் புதைத்ததாகவும், சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தானே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தனது கணவர் காணாமல் போனதாகவும் வாக்குமூலம் கொடுதுள்ளார் பிரமிளா.

KITCHEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்