"பிரகதீஸ்வரர் ஆலயம் கட்ட முடியாம போகலாம்... ஆனா கக்கூஸ் கட்டினாலே..." - கமல் பேசியது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலக நாயகன் என இந்தியாவை தாண்டியும் அதிகம் அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சினி துறையில் இயங்கி வரும் கமல்ஹாசன், நடிப்பு, இயக்கம், கதை ஆசிரியர், நடன கலைஞர், பாடகர் என பல துறைகளிலும் சிறந்த நபராகவும் விளங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்திருந்த 'விக்ரம்' திரைப்படம் வெளியாகி பிளாக்பாஸ்டர் ஹிட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளது பற்றி அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதே போல, கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, KH234 என குறிப்பிடப்பட்டுள்ள கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

'நாயகன்' திரைப்படத்திற்கு பிறகு, சுமார் 35 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இதற்கு மத்தியில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு வந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7) அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தனது பிறந்தநாளான இன்று, குடும்பத்தினர் மற்றும் சினிமா பிரபலங்கள் பலருடன் நேரத்தை செலவழித்திருந்தார் கமல்ஹாசன். அதே போல, ரசிகர்கள் நடத்திய மருத்துவ முகாமிலும் அவர் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, தனது 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார் நடிகர் கமல்ஹாசன்.

இந்த உரையில் பேசிய கமல்ஹாசன், "கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, வன்முறை, ஆபாச பேச்சு, ஊழல், கமிஷன் அதெல்லாம் இல்லாமல் ஒரு கட்சி இயங்கவே முடியாது என்பதை கல்வெட்டு மாதிரி எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த கல்வெட்டுகளை எல்லாம் நாம் தகர்த்தெறிய தெரிய வேண்டும். அதுவல்ல பிரசிஷ்டி. இனி நாம் எழுதப் போவதுதான் பிரசிஷ்டி. மக்களின் பிரசிஷ்டி. நம்மளால பிரகதீஸ்வரர் ஆலயம் எல்லாம் கட்ட முடியாம கூட போகலாம்.

ஆனா கக்கூஸ் கட்டுனா எனக்கு பெருமை. நான் அதை குறைவாக சொல்லவில்லை. நம்மிடம் இருக்கும் வசதிக்கு இதைத்தான் கட்ட முடியும். ஊரையே கட்டியாண்டால் அந்த மாதிரி ஏதாவது செய்யலாம். ஒரு நாளந்தா யுனிவர்சிட்டி பண்ணலாம். இப்போது நம்மால் என்ன முடியுமோ, அப்படி சிறக சிறுக செய்தாலே போதுமானது. வாழ்க்கையே நாம் அப்படித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தீர்க்காயிசு என்றால் முழு வாழ்க்கையை ஒரே நாளில் வாழ முடியுமா?. இல்லை பல விருதுகளை ஒரே நாளில் ரசிக்க முடியுமா?. அல்லது பல பல படுக்கைகளில் ஒரே இரவில் தூங்க முடியுமா?. ஒரு பாயாக இருந்தாலும் முழுதாக எட்டு மணி நேரம் தூங்கி விட்டால் நிம்மதியாக இருக்கும். நமக்கு இந்த பாய் போதும், இதனை பறக்கும் கம்பளமாக மாற்ற உங்களால் முடியும்" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

KAMALHAASAN, BRIHADEESWARAR TEMPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்