மாமியார் இல்லாத 'நேரம்' பார்த்து மருமகளுடன் 'கள்ளக்காதல்'... 'பார்வை' இழந்த பரிதாபம்... போலீஸ்காரர் மற்றும் ஆர் ஐ கைது.

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவண்ணாமலையில், கள்ளக்காதல் விவகாரத்தில், வி.ஏ.ஓ., முகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவத்தில் போலீஸ்காரர், ஆர்.ஐ இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை, வேங்கிக்காலை சேர்ந்த சிவக்குமார்(31) கிளிப்பட்டு வி.ஏ.ஓ.,வாக உள்ளார். வேங்கிக்கால் உண்ணாமலை நகரை சேர்ந்த, கியூ பிராஞ்ச் போலீஸ்காரர் ஸ்ரீபால்(42), இவரது மாமியார் விமலா(52) வெறையூர் வருவாய் ஆய்வாளராக உள்ளார். பணி காரணமாக சிவக்குமார், விமலா வீட்டுக்கு சென்று வந்தபோது, ஸ்ரீபால் மற்றும் விமலா வீட்டில் இல்லை. அப்போது ஸ்ரீபாலின் மனைவி ஞானசுந்தரியிடம் சிவகுமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில், கடந்த நவ.,29ல் இரவு, ஸ்ரீபால் மற்றும் விமலா இருவரும் சேர்ந்து, சிவக்குமார் முகத்தில் ஆசிட் ஊற்றினர். இதில், மூவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிவக்குமாரின் கண்பார்வை பறி போனது.

ACID, BLIND, ILLEGAL RELATIONSHIP, THIRUVANNAMALAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்