நடுரோட்டில் வைத்து 'முதியவரை' அறையும் காவலர்.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காவலர் ஒருவர் முதியவரைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாநகர ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை ரவுண்டானா பகுதியில் கன்டோன்மென்ட் சாலையிலிருந்து ஐயப்பன் கோவிலை நோக்கி சைக்கிளில் முதியவர் ஒருவர் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது அதே வழியில் மோட்டார் பைக்கில் வந்த காவலர்  ஒருவரின் வாகனம் மோதியது.

ஆனால் சைக்கிளில் வந்த முதியவர், காவலரிடம் ஏதோ கூறிய நிலையில் ஆத்திரம் அடைந்த காவலர் பைக்கில் இருந்து இறங்கி முதியவரை தாக்குகிறார். இந்த வீடியோ வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்