Video: மேகம் கருக்காதோ பாட்டுக்கு... சாலை நடுவே.. இரவு நேரத்தில் வைரல் டான்ஸ்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுவாக நமது மனது சற்று மிகவும் குழப்பத்திலோ அல்லது ஏதாவது பிரச்சனை நினைத்து வருந்தி கொண்டிருக்கும் போதோ, இணையத்தை திறந்தால் பிரச்சனைகள் அனைத்தையும் மறக்க வைக்கக் கூடிய வகையில் சில வீடியோக்கள் கண்ணில் படும்.

Advertising
>
Advertising

Also Read | பெண் வேடமிட்ட இளம் கலைஞர்.. மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மரணம்.!

அந்த வகையில் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி பார்க்கும் பலரையும் துள்ளல் போட வைத்துள்ளது.

நடனம் என்பது சிலருக்கு ஒரு பொழுதுபோக்காகவும், சிலருக்கு அதே ஒரு முக்கிய தொழிலாகவும் இருக்கும். அதே போல இந்த நடனமானது ஒருவரின் மன அழுத்தத்தை குறைத்து தங்களை வேறொரு வழிக்கு அழைத்து செல்லவும் வழி வகுக்கும்.

தற்போது அடிக்கடி ஏதாவது பாடல்கள் வைரலாகும் சமயத்தில், அது தொடர்பான நடன வீடியோக்கள் அதிகம் வைரல் ஆவதை பார்த்திருப்போம். அப்படி ஒரு வீடியோ தான், சற்று வித்தியாசமான ஒரு கோணத்தில் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றில், திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் "மேகம் கருக்காதா" என்னும் பாடலுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் ஆகியோர் இணைந்து, சாலையின் நடுவே இரவு நேரத்தில் நடனமாடுகின்றனர். மிகவும் அசத்தலாக அந்த பாடலில் வரும் நடன அசைவுகளை அப்படியே திருப்பி வடிவமைக்கும் இந்த இரண்டு பேரும் சாலை நடுவே நின்றாடி கொண்டிருக்க அவருக்கு தெரியாமல் ஒரு மாடியில் இருந்து இந்த வீடியோவை ஒரு நபர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிதாக நடனமாடும் நபர்கள் போல இல்லாமல், மிகவும் அசத்தலாக அவர்கள் சாலையில் ஆடிய இந்த வீடியோ தற்போது பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. அதே வேளையில், மிக அசத்தலாக இருக்க வேண்டும் என்பதற்காக, யாரோ ஒருவர் மறைந்து நின்று எடுப்பது போலவே எடுத்தால் அழகாக இருக்கும் என்று கருதி அவர்களே நண்பர்களிடம் வீடியோ எடுக்க சொல்லியிருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

 

Also Read | Video: சிங்கர்ஸ்க்கே டஃப் கொடுக்கும் தேயிலை தொழிலாளியின் உருக வைக்கும் பாட்டு.!

MEGAM KARUKKATHO, DHANUSH, THIRUCHITRAMBALAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்