நடிகர்கள் விமல், ’பரோட்டா’ சூரி மீது ’போலீசார்’ வழக்கு பதிவு - என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர்கள் விமல், சூரி மீது கொடைக்கானம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்று மீன் பிடித்த புகைப்படங்களை வெளியிட்டதை அடுத்து, அதன் அடிப்படையில் கடந்த 18-ஆம் தேதி நடிகர்கள் விமல், சூரி மீது வனத்துறையில் வழக்குப்பதிவு செய்து தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது, ஊரடங்கை மீறி தடையை மீறி இ-பாஸ் இல்லாமல் வந்தது, நோய் பரவும் நேரத்தில் பாதுகாப்பில்லாமல் நடந்துகொண்டது உள்ளிட்டவற்றுக்காக பிரிவு 270ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு உதவிய போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்