‘என் காதலன் எங்கே?’.. தர்ணா போராட்டத்தில் இறங்கிய காதலி.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரகண்டநல்லூர் அருகே காதலன் வீட்டின் முன் காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகள் அன்பரசி (23). அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் விஸ்வநாதன் (27). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் விஸ்வநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தகவல் அன்பரசிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அன்பரசி புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஸ்வநாதனுக்கு நாளை மறுநாள் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை அறிந்த அன்பரசி, ‘என் காதலன் எங்கே?’ என எழுதப்பட்ட பலகையுடன் காதலன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் அன்பரிசியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை அடுத்து அப்பெண் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்