"நீங்க யாரு கேக்குறதுக்கு?".. அசீம் சொன்ன வார்த்தை.. ஆயிஷாவிடம் விளக்கி விக்ரமன் சொன்ன பரபரப்பு காரணம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிக்பாஸ் வீட்டிற்குள் விக்ரமன், அசீம் மற்றும் ஜிபி முத்து ஆகியோரிடையே வாக்குவாதம் நடந்தது தொடர்பான விஷயம், அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது இதுகுறித்து ஆயிஷாவிடம் விளக்கி உள்ளார் விக்ரமன்.

Advertising
>
Advertising

தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது.

இதனிடையே, தனலட்சுமி மற்றும் அசல் கோலார் ஆகியோர் இடையே வாக்குவாதம் நடைபெற்றது பெரிய அளவில் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதனையடுத்து சக போட்டியாளர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு வரும் விக்ரமன், என்ன நடந்தது என தனலட்சுமியிடன் கேட்க, அவர்,"அண்ணா-னு தான் நான் கூப்பிட்டேன். அதுக்கு பெரியம்மா மாதிரி இருக்க, ஆன்டி மாதிரி இருக்கன்னு சொல்றான்" என கூறுகிறார்.

பின்னர் விக்ரமனிடம், அசீம் கேள்வி கேட்க, அடுத்து ADK மற்றும் ஜிபி முத்து உள்ளிட்டோரும் விக்ரமனை சமரசம் செய்ய பார்க்கின்றனர். ஆனால், அப்போது மீண்டும் விவாதம் உருவாகவே, பிக்பாஸ் வீட்டிற்குள் இன்னும் பிரச்சனையை கிளப்பி இருந்தது.

இந்த நிலையில், தன்னைச் சுற்றி நடந்த விவாதங்கள் குறித்து ஆயிஷாவிடம் விளக்கம் கொடுக்கிறார் விக்ரமன். "தனலட்சுமி அழுதுகிட்டே போனா. எனக்கு ஒரு தங்கச்சி ஃபீலிங் இருக்கு. என்னாச்சு என கேட்டேன். அப்போது தனலட்சுமி விளக்கிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அசீம் அவரை இழுத்துக் கொண்டு சென்றார்.

நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவரும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கையை  பிடித்து கொண்டு அசீம் இழுத்து கொண்டு போவதை பார்த்து, "அசீம் , உங்களுக்கு என்ன பிரச்சனை" என கேட்டேன். "நீங்கள் ஏன் தலையிடுறீங்க, நீங்க யாரு கேக்குறதுக்கு" என என்னிடம் அசீம் திரும்ப கேட்டார்.

முன்னதாக, தனலட்சுமி மற்றும் அசல் சண்டை போடும் போது எல்லாரும் தனலட்சுமியை தான் கட்டுப்படுத்துகிறார்கள். அதனை தனலட்சுமி என்னிடம் விளக்கியதும் கடுப்பாகி விட்டேன். இதனால் அசீம் செய்தது இன்னும் கோபம் வந்தது. அவர் எப்போதும் அப்படி தான் செய்கிறார். இதன் பின்னர், முத்து அண்ணா வந்து, "நடுவுல நீங்க எதுக்கு வர்றீங்க. உங்கள யாரு கூப்பிட்டா" என அவர் சொன்னதும், நான் ஏன் வரக் கூடாது என தோன்றியது. எல்லாம் முடிந்த பிறகு நான் வருவதாக அவர்கள் சொன்னார்கள்" என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, இதற்கு முன்பாகவே என் மீது ஜிபி முத்துவிற்கு கோபம் இருந்ததாக குறிப்பிட்ட விக்ரமன், தனலட்சுமியை ஏதோ சண்டைக்காரி மாதிரி, வில்லி மாதிரி இழுத்துக் கொண்டு மற்றவர்கள் பஞ்சாயத்து செய்ததாகவும் ஆயிஷாவிடம் தெரிவிக்கிறார். இதுகுறித்து இன்னும் பல விஷயங்களை ஆயிஷாவிடம் விக்ரமன் தெரிவித்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இன்னும் பரபரப்பு உருவாகி உள்ளது.

BIGGBOSS6 TAMIL, BB6 TAMIL, VIKRAMAN, AZEEM, GP MUTHU, DHANALAKSHMI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்