"நீங்க பண்ணது தப்புங்க".. கோவப்பட்ட விக்ரமன்.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த காரசார விவாதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிக்பாஸ் வீட்டுக்குள் விக்ரமனும், சக போட்டியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட, வீடே அதிர்ந்து போயிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | வண்டி ஒட்டுறவங்க இதெல்லாம் செஞ்சா 10 ஆயிரம் ருபாய் Fine.. தமிழக அரசு அதிரடி.. முழு விபரம்..!

கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. தினந்தோறும் பல்வேறு வேடிக்கையான விவாதங்கள், சுவாரஸ்யமான டாஸ்க்குகள் என பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

தற்போது, பிக்பாஸ் வீட்டுக்குள் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட எண்களின் அடிப்படையில் கதைகளை சொல்லிவருகின்றனர். அப்போது சக போட்டியாளர்கள் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பஸ்ஸரை அழுத்தலாம்.

வெளியே வைக்கப்பட்ட 3 பஸ்ஸரும் அழுத்தப்பட்டால், கதை சொல்பவர் தங்களது கதையினை நிறுத்திக்கொள்ளவேண்டும். இதனிடையே தனலட்சுமி தன்னுடைய கதையை சொல்லும்போது தனது அம்மாவை பற்றி உருக்கமாக பேசியிருந்தார். இதனால் GP முத்து உள்ளிட்ட போட்டியாளர்கள் கண்கலங்கிவிட்டனர். இந்நிலையில், வீட்டுக்குள் தனலட்சுமி - அசல் கோலார் இடையே வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. அசீம், ஜனனி ஆகியோர் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

அப்போது, தன்னை பாடி ஷேமிங் செய்வதாக அசல் கோலாரின் மீது குற்றம்சாட்டினார் தனலட்சுமி. அப்போது அசல் பேச துவங்க அங்கிருந்த அசீம், ஜனனி ஆகியோர் இருவரையும் சமாதனப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்கின்றனர். இதனிடையே அங்கு வரும் விக்ரமன், என்ன நடந்தது என தனலட்சுமியிடன் கேட்க, அவர்,"அண்ணா-னு தான் நான் கூப்பிட்டேன். அதுக்கு பெரியம்மா மாதிரி இருக்க, ஆன்டி மாதிரி இருக்கன்னு சொல்றான்" என கூறுகிறார்.

இதனையடுத்து விக்ரமன் தனலட்சுமியிடம் பேசப் போக, அசீம் அவரை விடச்சொல்லி பேசுகிறார்.  அதற்கு விக்ரமனோ, “இருங்க.. நான் விசாரிக்கிறேன்.. அவங்க கிட்டதானே பேசினேன்” என சொல்ல, அதற்கு அசீம், "நான் உன்கிட்ட பேசுனேனா? உனக்கென்ன பிரச்சனை?" எனக் கேட்கிறார். அப்போது அங்குவரும் GP முத்து மற்றும் ADK ஆகியோர் விக்ரமனை சமாதானப்படுத்த தனியாக அழைத்துச் செல்கின்றனர்.

அப்போது, "நான் கேக்க கூடாதுனு சொல்றதுக்கு நீங்க யாரு?" என விக்ரமன் கோபமாக கேட்கிறார். மேலும் விஷயத்துக்குள் வந்த ஜிபி முத்து, விக்ரமனை அப்புறப்படுத்த, அவரிடம் விக்ரமன், “நீங்க ஏங்க என்ன மட்டும் எதுவும் கேக்க கூடாதுனு சொல்றீங்க.. என்னை மட்டும் நோஸ் கட் பண்றீங்க?” என பேசினார். இதனிடையே அங்கு வந்த ADK, “ஏன் பொண்ணு கிட்ட மட்டும் போய் கேக்குறீங்க.. அசலிடமும் கேளுங்க.?” என ADK கேட்க, "நீங்க திரும்ப தப்பான வார்த்தையை பயன்படுத்துறீங்க.. என்ன பொண்ணு பின்னாடி மட்டும் நான் போய் கேக்குறேன்னு சொல்றீங்க.. என்ன பேசிட்டு இருக்கீங்க?" என விக்ரமன் கொந்தளித்தார்.

அப்போது "யாரு சொன்னாலும் தப்பா?" எனக் கேட்கிறார் ADK. பின்னர், "இந்த விஷயத்துல நீங்க ஏன் வந்தீங்க?" என முத்துவிடம் விக்ரமன் கேட்க "வரத்தான் செய்வேன்" என என்கிறார் முத்து. ஏற்கனவே தனலட்சுமி - அசல் கோலார் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து விக்ரமனும் சக போட்டியாளர்களும் விவாதத்தில் ஈடுபட்டிருப்பது பிக்பாஸ் வீட்டுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Also Read | யம்மாடி.. என்ன ஷாட்டுங்க இது.!.. கிரவுண்டை விட்டு வெளியே பறந்த பந்து.. பக்கத்துல நின்னவரோட ரியாக்ஷனை பாருங்க.. வீடியோ..!

BIGG BOSS, BIGG BOSS TAMIL, BIGG BOSS TAMIL 6, VIJAY TV, GP MUTHU, VIKRAMAN, DHANALAKSHMI, ASAL ISSUE, DHANALAKSHMI ASAL ISSUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்