"சிரம் தாழ்ந்த நன்றி".. 'விடுதலை' நாயகன் சூரி பகிர்ந்த உருக்கமான கடிதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விடுதலை முதல் பாகம் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் கதாநாயகன் சூரி உருக்கமான கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது. விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

தங்கம் எழுதிய வேங்கைச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். ஏற்கனவே  தங்கம் - வெற்றிமாறனின் கூட்டுப் படைப்பாகிய "இறைவன் மிகப் பெரியவன்" கதைக்குத் திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று,   இயக்குநர் அமீர், அதை தற்போது திரைப்படமாக்கி வருகிறார்‌.

முன்னதாக விடுதலை பட முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி ரிலீசாகியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் இந்த படம் பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"அனைவருக்கும் வணக்கம். மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூக வலைத்தள நண்பர்கள், அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

VIDUTHALAI, SOORI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்