'வீட்டிலேயே விநாயகருக்கு பூஜை'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வழிபாடு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமது வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் விநாயகர் சதுர்த்தி ஆகிய இன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வைத்து அவர் பூஜை நடத்தினார். விநாயகருக்கு தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு, குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார். பூஜையில் அவருடைய குடும்பத்தினரும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்று சாமி கும்பிட்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்