இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், தனது 88-வது வயதிலும் கட்சிப்பணிகளில் தீவிரமாக இயங்கி வந்தார். சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த தா.பாண்டியன், அதற்கான மருந்துகளை உட்கொண்டு வந்தார். இந்தநிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி தா.பாண்டியன் இன்று (26.02.2021) காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்