'சீக்கிரம் போங்க...' 'யாரோ உங்க வீட்டுக்குள்ள...' 'மின்னல் வேகத்துல ஓடிய மொத்த குடும்பம்...' - போய் பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூரில் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் விவசாயி ஒருவரின் வீட்டில் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் அடுத்த மலைசந்து பகுதியில் வசித்து வருபவர் விவசாயி ராஜாமணி(50). இவர் நேற்று சுமார் 12 மணியளவில் தனது குடும்பத்தினருடன் அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டுருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சிலர் ராஜாமணியிடம் யாரோ ஒருவர் உங்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மொத்த குடும்பமும் வீட்டை நோக்கி ஓடியுள்ளனர். அப்போது ஒரு இளைஞர் தங்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பைக்கில் ஏறி தப்பி ஓடியுள்ளார்.

அப்போது திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளனர். மேலும் பைக்கில் தப்பி ஓட முயன்ற அந்த இளைஞர் தடுமாறி கீழே  விழுந்ததில், அப்பகுதி மக்கள் கொள்ளையனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, அணைக்கட்டு  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், கார்த்தி தலைமையிலான காவலர்கள் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த இளைஞரை மீட்டனர்.

அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில், தப்ப முயன்றவர் வேலூர் தாலுகா சோழவரம் கிராமத்தை பன்னீர்செல்வம் எனவும், ராணுவ வீரரான இவர் விடுமுறையில் ஊருக்கு வந்ததும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஊருக்கு வந்த 2-வது நாளிலேயே ராஜாமணியின் வீட்டை நோட்டமிட்டதாகவும், அதை தொடர்ந்து, நேற்று அவரது வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து,  பீரோவில் இருந்த 5 சவரன் நகை, ஒருஜோடி கால் கொலுசு, ரூ.7ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி கொண்டு பைக்கில் தப்பி செல்ல  முயன்றதும் தெரிய வந்தது.

ராணுவ வீரர் பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேர்மை மிகுந்த ராணுவ பணியில் இருக்கும் ஒருவரே விவசாயி வீட்டில் கொள்ளையடித்த சம்பவம்  அணைக்கட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்