+1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் +2 மறுவாய்ப்புத் தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு: பள்ளிக்கல்வித் துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (31.07.2020) வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், 12-ஆம் வகுப்பு மறுவாய்ப்புத் தேர்வுக்கான முடிவுகளும் அதே நாளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்-ஆக அனுப்பப் படும் எனவும், தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களின் மூலம் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்