‘நேரலையில் தகவல் வழங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியாளர்’... பலத்த சூரைக் காற்றால் ‘பறந்து சென்ற’ குடை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிவர் புயலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை காசிமேட்டில் கடுமையான சூறாவளி காற்று வீசி வருகிறது.

ஏராளமான படகுகள் கட்டப்பட்டு பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் பகுதியான காசிமேட்டு பகுதியில் நிவர் புயல் காரணமாக கடுமையான காற்று வீசி வருவதை குறித்த நேரலை அறிவிப்பினை தந்தி டிவி செய்தியாளர் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்துள்ளார்.

ஆனால் அவர் இந்த தகவல்களை நேரலையில், கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டே வழங்கிக் கொண்டிருந்தார்.

ALSO READ:சென்னை முழுவதும்.. மொதல்ல ‘இத’ பண்ணுங்க!! நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ‘மாநகராட்சி’ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அப்போது, அவருடைய குடையை சூரைக் காற்று தூக்கி எறிய, அது வெகுதூரம் பறந்தே சென்றுவிட, செய்தியாளரோ, ஒளிப்பதிவாளரை நோக்கி ஓடிவரும் காட்சிகள் நேரலை செய்திகளில் பதிவாகின.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்