‘விருப்ப மனு தாக்கல்’!.. உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விரும்பும் ‘தொகுதி’ இதுதான்.. பரபரக்கும் அரசியல் களம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள தொகுதி குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிக்கான விருப்ப மனு விநியோகத்தை கடந்த 17ம் தேதி திமுக தொடங்கியது.

இதில் திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நேற்றுமுன்தினம் 24-ம் தேதி வரை விருப்ப மனுக்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார். தற்போது இந்த மனுக்களை பூர்த்தி செய்து திமுகவினர் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தனது விருப்பமனுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பரிசீலனை செய்து வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்