"நைட் 2 பேரும் ஆட்டோல போனாங்க" .. சென்னையில் நண்பர்களுக்கு நடந்த பதற வைக்கும் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆவடி துணை ஆணையர் அலுவலகம் பின்புறம் உள்ள மைதானத்தில் இருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

சென்னை

சென்னை ஆவடி மசூதி தெருவை சேர்ந்தவர் பாஷா. இவரது மகன் அசருதீன் (வயது 30). இவர் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது நண்பர் சுந்தர் (வயது 29). இவர் ஆட்டோ ஓட்டுநர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்றிரவு நண்பர்களுடன் வெளியே சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

மைதானத்தில் சடலம்

இந்த சூழலில் இவர்கள் இருவரும் ஆவடி துணை ஆணையர் அலுவலகம் பின்புறம் உள்ள மைதானத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்டோவில் சென்ற நண்பர்கள்

இறந்து கிடந்த அசாருதீனும், சுந்தரும் தங்களது நண்பர்கள் 2 பேருடன் ஆட்டோவில் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதில் அசாருதீன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதனால் முன்பகை காரணமாக அசாருதீனையும், அவரது நண்பர் சுந்தரையும் யாரேனும் கொன்று இருக்கலாம் என போலீசார் சந்தேகத்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஆவடி பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 30) , யாசின் (வயது 26) என இருவரை போலீசார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மர்ம மரணம்

உயிரிழந்த அசாருதீனுக்கு கவுசி என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். சுந்தருக்கு பிரியா என்ற மனைவும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆவடி அருகே நண்பர்கள் இருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CHENNAI, AVADI, FRIENDS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்