மாட்டுக்கு புல் அறுக்க போன மனைவி.. ரொம்ப நேரமாகியும் வீடு திரும்பல.. தேடிச் சென்ற கணவருக்கு காத்திருந்த ‘ஷாக்’..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாட்டுக்கு புல் அறுக்க சென்ற மூதாட்டி நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 100 வருசத்துக்கு முன்னாடி மூழ்கிய கப்பலில் ‘தங்கப்புதையல்’.. இதோட மதிப்பு இத்தனை கோடியா..? மிரண்டு போன ஆய்வாளர்கள்..!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் சுல்லாமணிகரை பகுதியை சேர்ந்தவர் மலை கொழுந்தன் (72 வயது). இவரது மனைவி அக்கம்மாள் (65 வயது). இந்த தம்பதியருக்கு சிறும்பாயி, அய்யினாள் என்ற மகள்களும், வைரமணி என்ற மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் உள்ளூரிலேயே மணமுடித்துக் கொடுத்துள்ளனர். மகனும் அதே உள்ளூரில் வசித்து வருகிறார்.

மலை கொழுந்தன் தனது மனைவி அக்கம்மாளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் ஆடு, மாடு வளர்த்து வருகின்றனர். அதனால் தினமும் ஆடு, மாடுகளுக்கு பசும்புல் அறுக்க அருகில் உள்ள வயல்வெளிக்கு அக்கம்மாள் சென்று வந்துள்ளார்.

அதேபோல் நேற்று மதியம் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சோளக்காட்டில் புல் அறுக்க அக்கம்மாள் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அக்கம்மாள் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய கணவர் மலை கொழுந்தன், மகன் மற்றும் மகள்கள் ஆகியோர் இரவு முழுக்க தேடியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சோளக் காட்டுக்குள் அக்கம்மாள் படுகாயங்களுடன் சடலமாக கிடந்ததை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் அக்கம்மாள் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயின் மற்றும் தாலி ஆகியவற்றை காணவில்லை என்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அக்கம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | “ஆரம்பத்துல கேமரால ஏதோ கோளாறுன்னு நெனச்சோம், ஆனா..!” உறைபனிக்கு அடியில் அதிசயம்.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்..!

TRICHY, OLD WOMAN, FOREST, திருச்சி மாவட்டம், மூதாட்டி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்