'நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து’... ‘எரிந்த சொகுசு கார்’... 'பதறிப்போன மருத்துவக் கல்லூரி மாணவர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்ததால், தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் படித்து வருபவர் கிறிஸ்டோபர். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் நோக்கி சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார், சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பின்னர் கார் தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்தது.

இதனால் பதறிப்போன, கிறிஸ்டோபர், உடனடியாக காரிலிருந்து வெளியேறினார். சிறு காயங்களுடன் தப்பித்த அவரை, அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் தகவலறிந்து வந்த, தீயணப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

FIREACCIDENT, TRICHY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்