'குளித்துக்கொண்டிருந்த இளம் பெண்.. வீட்டு மாடியில் இருந்து...!'.. 'இளைஞர்' செய்த 'உறையவைத்த' காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆம்பூர் அருகே 17 வயது வளிரளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை உமராபாத் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த, பைரப்பல்லி பகுதியில், வசித்து வரும் முருகேசன் என்பவரின் 17 வயது மகள் வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ்குமார் எனும் இளைஞர் வீடியோ எடுத்துள்ளார்.

வீட்டு மாடியில் இருந்து அப்பெண் குளிப்பதை தனுஷ்குமார் வீடியோ எடுத்ததை பார்த்த, அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து சரமாரியாகத் தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் உமராபாத் போலீஸார் தனுஷ்குமாரின் செல்போனை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்