'தங்கை முறையுள்ள மனநலம் பாதித்த சிறுமியை...' 'உறவினரும் அவரின் நண்பரும் சேர்ந்து செய்த கொடூரம்...' - கதறி துடித்த பெற்றோர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மன வளர்ச்சி குன்றிய தங்கை முறையுள்ள 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மன நலம் பாதிக்கப்பட்ட 15 வயது மகளுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு இருந்துள்ளது. அதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தான் மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மனநலம் பாதிப்படைந்த குழந்தையை இந்த நிலைக்கு ஆளாகியவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கணேசன் மற்றும் பாண்டி ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களின் கணேசன் என்பவர் சிறுமிக்கு அண்ணன் முறை கொண்ட உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் யாரும் இல்லாத சமயம் பார்த்து சிறுமியை தனியே அழைத்து சென்று அன்பாக பேசி இந்த கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர். மனநலம் பாதிப்படைந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இருவரின் மீதும் போலீசார் போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்