நள்ளிரவில் வீட்டுக்குள் டார்ச் லைட் அடிச்சு பார்த்த ‘60S ஸ்டைல்’ கொள்ளையர்கள்.! பீதி கிளப்பிய சம்பவம்.

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அந்த வகையில் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஆயுதங்களோடு ரோந்து வந்த கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

நகராட்சி 3-வது வார்டு பகுதியில் சாய் நகர், பிருந்தா நகர் ஆகிய ஏரியாக்கள் உள்ளன. அதிக குடியிருப்பு வாசிகள் இருக்கும் இந்த பகுதியில்தான், நள்ளிரவில் அரிவாளுடன் இரண்டு கொள்ளையர்கள் உள்நுழைந்துள்ளனர். வந்தவர்கள், வீடுகளின் ஜன்னல் மற்றும் கண்ணாடிகளை நோட்டமிடுகின்றனர். அதிலும் ஜன்னல் வழியே டார்ச் லைட் அடித்து உள்ளே ஆள் நடமாட்டம் குறித்து அவதானிக்கின்றனர்.

அதன் பின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து திருடவும் முயற்சித்ததாகவும், ஆனால் அதற்குள் திருடர்களை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துவிட்டு, சத்தம் போட, உடனே உஷார் ஆன அந்த கொள்ளையர்கள், யார் கையிலும் சிக்காமல் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிகிறது.  இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளன. அவற்றில், இரண்டு திருடர்களை காண முடிகிறது. கருப்பு வெள்ளை படங்களில் காட்டப்படும் பாணியில் பழைய கால வேட்டிக்கட்டு முறையில் இருந்த அந்த கொள்ளையர்கள்,  முகமூடி அணிந்தவாறும், வீச்சரிவாளை முதுகில் சொருகியவாறும் வீடுகளின் ஜன்னல் வழியாக திருட முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது.

முன்னதாக கடந்த 13-ம் தேதி நாமக்கல் போதுபட்டி அடுத்துள்ள சரவணநகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இதே திருடர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் இருந்து நகையை பறித்தக்கொண்டு பறந்தோடினர். இந்நிலையில் அதே திருடர்கள் இப்படி நேற்று சாய் நகர், பிருந்தா நகர்களில் கொள்ளை அடிக்க முயற்சித்தது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நகரவாசிகள் தத்தம் வீடுகளில் நிம்மதியாக உறங்கும்போது இப்படி டார்ச் லைட் அடித்து பார்த்து வீட்டை நோட்டமடிக்கும் வீச்சரிவாள் முகமூடி கும்பல் நாமக்கலையே பரபரப்புகுள்ளாக்கியுள்ளனர்.

ROBBERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்