பிளஸ்-2 ‘பொதுத்தேர்வு’ அட்டவணை வெளியீடு.. தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிளஸ் 2 பொது தேர்வுக்கான கால அட்டவணையை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பொதுத்தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையை, அரசு தேர்வுத்துறை தயாரித்துள்ளது.

மே முதல் ஜூன் வரை பல்வேறு தேதிகளை குறிப்பிட்டு பொது தேர்வுக்கான அட்டவணையை பள்ளி கல்வி அதிகாரிகள் தயாரித்தனர். தேர்தல் பணிகள் பாதிக்காத வகையில், இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 3ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணி வரை என 3 மணிநேரம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்