தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு.. கவுன்சிலராக விரும்புவர்களுக்கு தேர்தல் கமிஷன் வெளியிட்ட குஷியான தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை:  தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி  நடைபெற உள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.85,000 வரை செலவு செய்யலாம்

சென்னை பெருநகர மாநகராட்சியில் மட்டும் வேட்பாளர் ரூ.90,000 வரை செலவு செய்யலாம்.

பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.17,000 வரை செலவு செய்யலாம்.

மேயர் , துணை மேயர் , நகர் மன்ற தலைவர், பேரூராட்சி பதவியிடங்களுக்கு மார்ச் 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் செலவின கணக்குகளை பிப்ரவரி 22-ம் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

21 மாநகராட்சிகளில்  1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளது. 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளது.

490 பேரூரட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற முடிந்துவிட்ட நிலையில் தற்போது நகராட்சி , பேரூராட்சி,  மாநகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள இருப்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ELECTIONS, ELECTIONCOMMISSION, TNLOCALBODYELECTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்