'ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா!'... ‘தமிழக’ அரசின் ‘அசத்தல்’ அறிவிப்பு! ‘மகிழ்ச்சிப் பொங்கலில்’ கல்லூரி மாணவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக இண்டர்நெட் டேட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா சூழலால் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள் நடந்து வருகின்றன. அண்மையில் தான் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கென எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறக்கூடிய சுயநிதி கல்லூரிகள் என இந்த கல்லூரிகளில் பயிலக்கூடிய 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களுக்கு இந்த வசதியை இலவசமாக பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: 'பாக்கெட்டில் செல்போன்.. உட்கார்ந்ததும் தவறுதலாக போலீசுக்கு சென்றுவிட்ட போன் கால்'.. முழுத் திட்டத்தையும் கேட்ட போலீஸார்... திருடி முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால்... கொள்ளையர்களுக்கு நடந்த  ‘மரண’ பங்கம்!

ஆன்லைன் வகுப்புகளுக்காக வழங்கப்படும் இந்த இலவச டேட்டா கார்டுகளை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்