தமிழகத்தில் 'ஊரடங்கு' நீட்டிப்பு குறித்து,,... வெளியான 'லேட்டஸ்ட்' தகவல்... முழு 'விவரம்' உள்ளே:

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையிலுள்ள பல்வேறு தளர்வுகளுடன் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். ஹோட்டல் மற்றும் தேனீர் கடைகள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றலாம். அதே போல, சினிமா படப்பிடிப்பு, அரசு துறை சார்ந்த நிறுவனங்கள் உட்பட்டவை தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை தடை செய்யப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை திறப்பதற்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். அது மட்டுமில்லாமல் அரசியல் மற்றும் ஆன்மீக கூட்டங்கள், நிகழ்வுகள் போன்றவை நடப்பதற்கான தடை தொடரும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்