“தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ரயில் சேவைகள் இயங்காது!!”.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஜூலை 31ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து, உள்ளூர் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது பொதுப் போக்குவரத்து சேவையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நிமித்தமாக, ஜூலை 31ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்