கொரோனாவுக்கு 'பலியான' முதல் 'காவலர்'! 'சென்னையில்' 47 வயது காவல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்பட பொதுப்பணியாளர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த 47 வயது காவல் அதிகாரி ஒருவருக்கு 2 வாரங்களுக்கு முன்புதான் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் தொற்று தீவிரமானதை அடுத்து, 4 நாட்களுக்கு முன்னர்தான் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இன்றைய தினம் மட்டும் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்