101 பேர் பலி... சென்னை உட்பட தமிழகத்தில் இன்றைய (ஆகஸ்டு 21, 2020) கொரோனா பாதிப்பு முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,67,439 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரினெ எண்ணிக்கை 1,22, 757 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய தினம் குணமானவர்களின் எண்ணிக்கை 5,746 ஆக பதிவாகியுள்ளது. இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 3,07,677 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தவிர, தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்றைய தினம் 101 பேர் பலியானதை அடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,340 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்