'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (12-09-2020) ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மூலம் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக தமிழக அரசு நாள்தோறும் வெளியிட்டு வருகின்றது. கொரோனா மூலம் பாதிப்படைந்தவர்களில் 5,490 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள 5 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கோயம்பத்தூரில் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தமிழகத்தில் இன்று 6,227 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,649 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 47,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இன்று 76 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,307 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்