'தமிழகத்தின் இன்றைய (23-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்’... முழு விவரங்கள் உள்ளே...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று மேலும் 1,066 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,066 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,10,080 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,131 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,88,742 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 9,314 பேர் (சிகிச்சை மற்றும் தனிமை) கொரோனா தொற்றுடன் உள்ளனர். இன்று தனியார் மருத்துவமனையில் 4 பேர், அரசு மருத்துவமனையில் 8 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12,024 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இன்று 70,911 மாதிரிகளும், 70,534 பேருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்