'87 பேர் உயிரிழப்பு'... 'அதிகபட்சமாக சென்னையில் மட்டும்'... 'தமிழகத்தின் இன்றைய (ஆகஸ்டு 29, 2020) கொரோனா நிலவரம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 6,352 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது. அதிகட்சமாக சென்னையில் இன்று புதிதாக 1,285 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,55,727 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்