'நீண்ட நாட்களுக்குபின் குறைந்த உயிரிழப்பு'... 'ஆனாலும் சென்னையில்'... 'இன்றைய (ஆகஸ்டு 22, 2020) தமிழக கொரோனா நிலவரம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று புதிதாக 5,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.73 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 24வது நாளாக 6 ஆயிரத்திற்கும் குறைவாக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,73,410 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று மட்டும் 5,603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,13,280 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 80 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 19 நாட்களாக 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகிவந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இன்றுடன் சேர்த்து ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,420 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது 53,710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,980 நபர்களில் 1,294 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,24,071 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,564 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்