தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!.. புதிய வடிவில் மேலும் சில சிக்கல்கள்!.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 7,435 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்து இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள் 6 பேர் உள்ளனர். அதேபோல், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 43 பேருக்கு இன்று தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 309 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,946 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை 2,90,906 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்