'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (04-07-2020) ஒரே நாளில் 4280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்படைந்த 4280 பேரில் 4180 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 100 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,956 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 2214 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,592ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப்பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 47 பேர், தனியார் மருத்துவமனையில் 18 பேர் என 65 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை  1450 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்படைந்த 1,07,001 பேரில் ஆண்கள் 65,604, பெண்கள் 41,375 மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 22 ஆக உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்