'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (26-09-2020) ஒரே நாளில் 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்படைந்த  5,647 பேரில் 5,645 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,75,017 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,336 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,62,125 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 656 பேருக்கும், சேலத்தில் 296 பேருக்கும், செங்கல்பட்டில் 259 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,612 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,19,448 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 50 பேர், தனியார் மருத்துவமனையில் 35 பேர் என மொத்தம் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,233 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்