கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஓமிக்ரான் வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக இந்த நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்