தமிழகத்தில் 6,000ஐக் கடந்த பலி எண்ணிக்கை!! இன்றைய கொரோனா பாதிப்பு - முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை மொத்தமாக கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 59 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 850 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 89 ஆயிரத்து 787 ஆக உயர்ந்துள்ளது.

தவிர, 121 பேர் இன்று கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 7 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்